Saturday, October 09, 2010

ஆசை...!!!


கிடைக்காத ரோஜா மீது

ஆசைப்பட்டேன் கிடைக்கும்

என்ற நம்பிக்கையில் பிறகுதான்

தெரிந்தது அந்த ரோஜா எனக்கல்ல

என் கல்லறைக்கு என்று...!!!

Saturday, September 11, 2010

உன் ஞாபகம்...!!!


அன்று நீ
சிரித்துப் பேசிய
நிமிடங்கள்
ஒவ்வொன்றும்...

இன்று முள்ளாய்
குத்துகிறது

பிரிவு வருமென்று
தெரிந்திருந்தால்
அன்றே அழுதிருப்பேன்
மொத்தமாய்...!!!

மறந்து விடுங்கள்...!!!


மனதை குடைந்து கொண்டிருக்கும்

துயரங்கள்...

மானத்தை இழக்க வைத்த

சம்பவங்கள்...

உயிரை வெறுக்கும் படியான

அவமானங்கள்...

நினைவை விட்டு அகலாத

விபத்துக்கள்...

நெருப்பாக சுட்டெரித்த

வார்த்தைகள்...

மன்னிக்க முடியாத

குற்றங்கள்...

மறக்க முடியாத

வேதனைகள்...

அனைத்தையும் நீங்கள்

மறந்துவிடுங்கள்...!!!

காதல்


நீங்கள் பேசும் வார்த்தை

எல்லோருக்கும் புரியும்

ஆனால் நீங்கள் பேசாத

மௌனம் உங்களை

நேசிப்பவருக்கு மட்டுமே

புரியும்...!!!



எனக்கு மட்டுமே சொந்தம்

என்று நான் எதையும்

நினைத்ததில்லை...

உங்கள் அன்பை தவிர...!!!



உயிரே இப்பொழுதே

என்னை காதலித்துவிடு

இல்லையென்றால் அடுத்த

ஜென்மத்தில் இதற்கும்

சேர்த்து நிறைய காதலிக்க

வேண்டியிருக்கும்...!!!



உயிரே கண்ணுக்கு

தெரியாமல் இருப்பதால்

தானோ என் இதயத்தின்

வேதனையை உன்னால்

அறிய முடியவில்லையோ...?



அன்பான உன்

பார்வை...

அரவணைப்பான உன்

பேச்சு...

ஆழமான உன்

வார்த்தைகள்...

ஆடம்பரமில்லா உன்

வாழ்க்கை...

அருமையான உன்

கவித்துளிகள்...

அடக்கமான உன்

கோபம்...

அன்பு கொள்ள வைக்கும் உன்

நளினம்...

ஆத்மார்த்தமான உன்

முகம்...

ஆணவம் இல்லாத உன்

பணிவு...

இவையாவும் தான் உன்மீது

என்னைக் காதல் கொள்ளச் செய்கிறது...!!!

Monday, July 26, 2010

காதல் வலி


தென்றல் மோதி மலருக்கு
வலிப்பதில்லை ஆனால்
உங்கள் நினைவுகள் மோதி
என் இதயம் வலிக்கின்றது
சுமையாக அல்ல சுகமாக...!!!



காதலிப்பதற்கு நீ
இருக்கிறாய் என்ற காரணமே
போதுமாயிருக்கிறது நான்
தொடர்ந்து சுவாசிப்பதற்கு...!!!


என்னை பிடிக்கவில்லை
என்ற வார்த்தைகள் கூட
அழகாகத்தான் இருந்தது
அவள் உதடுகள் உச்சரித்த
போது...!!!



உன்னுடைய கண்ணீர் துளிகள்
ஒவ்வொன்றும் எனக்கு
சொந்தமானவை அதை
வீணாக்க உனக்கு உரிமை
இல்லை...கண்கள்.



எங்கு பார்த்தாலும் காதலர்கள்...
என்னைத்தான் காதலிக்க யாரும்
இல்லையென்று திரும்பினால்
என்னையும் காதலிக்கிறது
என் நிழல்...!!!



காயமின்றி இதயம்
வலிக்கிறது காரணம்
இன்றி அவள் என்னை
வெறுத்ததால்...!!!



துடிக்க மட்டுமே தெரிந்த என்
இதயத்திற்கு தவிக்கவும்
கற்றுக் கொடுத்தது
உன் அன்பு...!!!

யாருக்கும் தெரியாமல்
அவளை
நேசிக்கிறேன்
ஒரு நாள் அவளுக்கே

தெரியாமல் என்னை
நேசிப்பாள் என்று...!!!


ஆயுள் முழுவதும்
அவளுக்காக

காத்திருக்க தயார்

மரணம் போல்

அவள் நிச்சயமாய்

வருவாள் என்றால்...!!!


என்னை விட்டுச்சென்ற அவளை இன்னும்
காதலித்துக்கொண்டுதான் இருக்கிறேன்
அவளை மறக்கமுடியாமல் இல்லை
இன்னொருவளை நினைக்கத்
தெரியாமல்...!!!



உன்னைக் காதலித்துக் கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா என்பது தெரியாது
ஆனால் நான் இறக்கும்போதும் உன்னைக்
காதலித்துக்கொண்டிருப்பேன் என்பது
மட்டும் தெரியும்...!!!



அற்புதமான காதலை மட்டுமல்ல
அதை உன்னிடம் சொல்ல முடியாத
அதி அற்புதமான மெளனத்தையும்
நீ தான் எனக்குத் தந்தாய்...!!!



நீ சாய்வதற்கு என்றே
வைத்திருக்கும் என்
தோள்களில் யார் யாரோ
தூங்கி சாய்கிறார்கள்
பயணத்தில்...!!!



காதல் என்பதை யார் வேண்டுமானாலும்
கற்பனை பண்ணமுடியும் ஆனால்
அதன் வலியை காதலித்தவன்
மட்டுமே உணரமுடியும்...!!!

Sunday, July 18, 2010

நினைவு


நொடிக்கு நொடி

நினைக்கும் உன்னை

எப்படி மறப்பதென்று

தெரியாமல்தான்

உறங்கிவிட்டேன்

இந்த கல்லறையில்...!!!



மலர் போன்ற உன்

இதயத்திற்குள்

வாசமாக பிறக்க

ஆசைப்படுகிறேன்

உன்னோடு நானும்

உதிர்ந்து போக...!!!



"நீ என்னை நேசிக்கிறாய்"
என்று சொல்வதை விட
"நீ என்னை பிரியமாட்டாய்"
என்று சொல்வதைத்தான்
நான் அதிகம் விரும்புகிறேன்...!!!

என்னவளை பறித்த உன்னவனை

பற்றி நீ பேசும் போதெல்லாம்

காலடியில் சிக்கிய ரோஜாவாய்

கசங்குகிறது என் காதல்...!!!



நீ என்னருகில் இல்லை

என்பது எவ்வளவு

உண்மையோ அவ்வளவு

உண்மை நீ எனக்குள்

இருக்கிறாய் என்பதும்...!!!



ஒவ்வொரு நொடியும் உன்னை

காணும் நாள் வராதோ என

துடிக்கிறேன் நீ எனக்குள் தான்

இருக்கிறாய் என்பதையும் மறந்து...!!!



விக்கல் வரும்போதெல்லாம் யாரோ

நினைக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம்

பொய் அது உண்மையாக இருந்தால்

என் காதலி விக்கியே செத்திருப்பாள்...!!!

பிரிவு


எனக்காக பூத்திருக்கும்
ரோஜாவைக் கூட பறிக்க
முடியவில்லை...காரணம்
பிரிவின் வலி எனக்கும் தெரியும்...!!!

Thursday, July 08, 2010

சொல்லாத காதல்...!!!


கால் நனைக்கும் அலைகளோடு
கடற்கரையில் கைகோர்த்து நடந்ததில்லை...

யாரும் இல்லாத தனிமையில்
நடுக்கத்தோடு உதடுகளை ஒட்டியதில்லை...
...
ஆள் இல்லா திரையரங்குகளில்
கார்னர் சீட்டில் கதை பேசியதில்லை...

புற நகர் பூங்கா நாற்காலிகளில்
மடியில் தலை வைத்து படுத்ததில்லை...

கூட்டமான பஸ் பயணங்களில்
குறுஞ்செய்தி அனுப்பி கொஞ்சிக்கொண்டதில்லை...

பேய் உறங்கும் வேளையிலும்,
போர்வைக்குள் போனை ஒளித்து
பேசியதில்லை...

செல்ல சண்டைகள் போட்டு பிரிந்து
அடுத்த நாள் அனைத்தையும் மறந்து
தலை கோதியதில்லை...

பிப்ரவரி 14 க்கும்,
பிரிதொரு நாள் வரும் பிறந்த நாளுக்கும்
பரிசுகள் வாங்க மெனக்கெட்டதில்லை...

உன் நினைவை சொல்லும்
கடிதங்களும் , காதல் பரிசுகளும்
இல்லை என்னிடம்...

நீ போகும் பாதையில் சிந்தி செல்லும்
புன்னகையையும், பூக்களையும்தான்
சேர்த்து வைத்து இருக்கிறேன்...

தெற்று பல் தெரிய சிரிக்கும்
உன் முகம் மட்டும்தான் நெஞ்சில்
இருக்கிறது ஞாபகார்த்தமாய்...

இருந்தாலும் சந்தோசமாகத்தான் இருக்கிறேன்
சுகமாய்த்தான் இருக்கிறது இந்த தனிமையும்...

சொல்லாத காதலும் சொர்க்கம்தான்
நீ எனக்கில்லை என சுடும் அந்த நொடிகளை தவிர...!!!

Sunday, June 20, 2010

ஏன் தோழி...!!!


சிரித்துப் பேசிய நீ சில நிமிடம்
மௌனம் கொண்டாய் கண்டவுடன்
புன்னகைக்கும் நீ கண்டும் காணாமல்
பக்க பார்வைக்கு உன் பக்கம் அலையும்
இவன் மேல் கோபம் ஏன் தோழி...!!!

உயிரே...!!!


உயிரே உன் பூங்காவனத்துள் எந்தன்
சுவாசத்தை சிறைவைத்து விட்டு இன்று
பாலைவனத்தில் வாசகம் தேடுகின்றாயா
எனது இருப்பிடம் நிரந்தரமற்றதாக
இருந்தாலும் உன் மீது கொண்ட என்
அன்பு நிரந்தரமானது...!!!

இதயத்தில் நீ...!!!


கண்ணுக்குள் விழுந்தவள் நீ
கவிதை எழுத வைத்தவளும் நீ
இதயத்தை துளைத்தவளும் நீ
என் இளமையை ரசித்தவளும் நீ
காதலிக்க வைத்தவளும் நீ...!!!

நினைவானவளே...!!!


வாசிக்கப்படாத
வார்த்தைகளிற்குள்

நான் புதையுண்டு
போனாலும்

என் விதியின்
கீறல்களுடன்
தினமும்
உன்னை
சுவாசித்துக்
கொண்டேயிருப்பேன்...!!!

உண்மைக் காதல்


காதலை கவிதையாக்கி

கண்களாலேநீ காதலைச்

சொன்னதும் உன் விரசமில்லா

வார்தைகளும் விரல்படாத

நெருக்கமும் உன் முகத்தைப்

போலவே உன் உள்ளமும்

என்னைக் காணாத நாட்களில்

நீ வடிக்கும் கவிதை வரிகளும்

உன் உண்மையான

காதலை தெரிவித்தன...!!!இன்றும்

உன்னை ஞாபகப்படுத்துகின்றது...!!!

கடைசியாக...!!!


உன் நினைவுகளை மறக்க முயன்று

தோற்றுப்போய் விழித்துக்கொண்டிருப்பது

என் விழிகள் மட்டுமல்ல மனமும் தான்

உன் நினைவுகளை மறந்து மனதுக்கு

போர்வையிட்டு உறங்கும் ஆழ்ந்த

உறக்கத்தையாவது கற்றுக் கொடுத்துவிட்டு

போயிருக்கலாமே கடைசியாக...!!!

இனியவளே...!!!


முகில்கள் மேகத்தை விட்டு விலகுவதுமில்லை

மேகம் முகிலை விட்டு மறைவதுமில்லை

என்னுள் இருக்கும் உன் நினைவு என்னை

விட்டு பிரிவதுமில்லை என் உயிரினில்

இருக்கும் காதல் இந்த மண்ணை விட்டு

மறைவதுமில்லை...!!!

என்னவளே...!!!


இதயக்கதவைத் திறந்தவளே உன்னால்

மனதை புரிந்திட முடியவில்லை...?

என் பாதையில் வரத்துடித்தவளே

உனக்கு என் வழி தொடங்க முடியவில்லை...?

என்னை நேசித்த உனக்கு என் இலட்சியங்களை

நேசிக்க தெரியவில்லை...? நிழலாக வரமுடிந்த

உனக்கு நிஜமாக ஏன் வர முடியவில்லை...?

Saturday, June 19, 2010

உன் நினைவு


சிந்திக்கும் போதெல்லாம் சிந்தனையில்
உன் நினைவு
தப்பிக்க முடியாமல் தவிக்கிறது
என்
மனது தரணியில் உனைக்காண தவம்
என்ன செய்தேனோ தலையணையில்

உன் நினைவு தடம்புரள வைக்கிறது
தாரமாய் நீ வரும்வரை

தவறாது உன் நினைவு...!!!

வாடிய மனம்


அன்பே பூக்களெல்லாம்
உன் பாதச்சுவடாய்
தெரிந்தாலும் உன்
வருகை தெரியாமல்
வாடித்தான் போகிறது
என் இதயம்...!!!

காதல் கவிதைகள்... (01)

உலகத்தில் மலரை நேசிப்பவர்கள்
முள்ளை நேசிப்பது இல்லை
ஆனால்
நான் முள்ளை நேசிக்கிறேன்
ஒரு மலர்
என்னை காயப்படுத்தியதால்...!!!

**************

உங்கள் நட்பினால் உங்களை பிரிந்து
செல்லும் பாதைகளில் கிடந்த முட்கள்
குத்தியதில் பாதங்களில் மட்டுமல்ல
இதயத்திலும் குருதி கொப்பளிக்கின்றது...!!!

**************

சுமக்க முடியாத வேதனை சொல்ல
முடியாத மௌனம் ஆற்ற முடியாத
மனது இவற்றிடையே என்னிதய
இதழ்கள் விம்மி அழுவது எனக்கு
மட்டும் தெரிகின்றது...!!!

**************

பேசாத வார்த்தையை விட பார்க்காத
கண்களை விட நினைத்துக் கொண்டிருக்கும்
இதயத்திற்கு வலி அதிகம்...!!!

நீ எது வாங்கிக் கொடுத்தாலும் எதையாவது
செய்து விடுவேன் பதிலுக்கு இன்று பிரிவை
தந்திருக்கிறாய் பதிலுக்கு என்ன செய்வேன்...???

***************

அழகை பார்த்தே முதல் காதல்
வருகிறது அழகிடம் தோற்றுப்போயே
உண்மைக் காதல்
வருகிறது...!!!

****************

அன்று உன்னை காதலிக்கும் போது
காதலுக்கு பயப்பிட்டேன் இன்று யாரையும்
காதலிக்க பயப்பிடுகிறேன் உன்னை
மாதிரியே இருந்து விடுவாளோ என்று...!!!

*****************

யாரோடு வாழ முடியுமோ அவரோடு
வாழ்வதல்ல வாழ்க்கை யாரின்றி வாழ
முடியாதோ அவரோடு வாழ்வது தான் வாழ்க்கை...!!!

*****************

உலகம் என்பதில் நீ சின்ன ஜீவன் ஆனால்
உன்னை நேசிக்கும் ஒரு ஜீவனுக்கு நீ தான்
உலகம்...!!!

****************

முதல் காதலை அடைய நினைக்கும் போது
தகுதிகள் இருப்பதில்லை எல்லா தகுதிகளும்
கிடைக்கும் போது முதல் காதல் இருப்பதில்லை...!!!

**************

ஒரு உயிரை நீ நேசிப்பது நிஜம் என்றால்
அதை பறவை போல் பறக்கவிடு அது
உன்னை நேசிப்பது நிஜம் என்றால்
மீண்டும் உன்னை தேடிவரும்...!!!

***************

உறவின் மீது அன்பு வைப்பதை விட
உள்ளத்தின் மீது அன்பு வைத்துப் பாருங்கள்
அன்பு வைத்த உள்ளத்தின் கோபம் கூட
நமக்கு சுகமாகத்தான் தெரியும்...!!!

****************

நீ நேசிப்போர்க்கு உன் இதயத்தில் இடம்
கொடு உன்னை மட்டுமே நினைக்கும்
இதயத்திற்கு உன் உயிரையும் சேர்த்துக்கொடு...!!!

****************

அன்பு தான் இந்த உலகத்தில் எல்லா
நோய்களுக்கும் மருந்து அந்த அன்பு
பொய்யானால் உலகத்தில் அதைவிட
கொடிய விசம் எதுவுமில்லை...!!!

****************

அவள் மீது நான் கோபப்படும் போது என்னை
நான் வெறுக்கிறேன் என் மீது அவள்
கோபப்படும் போது அவளை
நான் ரசிக்கிறேன்...!!!

****************

அன்பின் ஆழம் எவ்வளவு என்பது
பிரிவின் போது தான் உணரமுடியும்
அதை உணா்கிறேன் உன்னை காணாமல்
இருக்கும் இந்த நிமிடங்களில்...!!!

*****************

காதல் ஒரு கனவு தான் சில பேருக்கு பலிக்கும்
பல பேருக்கு வலிக்கும் ஆனால் நட்பு மட்டும்
எப்போதும் ஜொலிக்கும்...!!!

******************

இனிமேல் எனக்கு இலையுதிர் காலம்
இல்லைதான் ஏனெனில் பட்ட மரத்திற்கு
ஏதடி இலையுதிர் காலமெல்லாம்...!!!

******************

அன்பான ஒருவரிடம் தோற்றுப்பாருங்கள்
வெற்றியை விட தோல்வி எத்தனை சுகம்
என்று தெரியும்...!!!

******************

கவிதை எழுத தெரியாத என்னை உலகமே
கவிஞன் என்றது தெரியாமல் எழுதிவிட்டேன்
உன் பெயரை...!!!

******************

என் கண்ணீா் துளிகூட என் கன்னங்களில்
கவிதை எழுதுகிறது என் உணா்வுகள் கூட
அதை தினம்தோறும் வாசிக்கின்றது என்
இதயம் கூட உன் காதலை தேடி தவிக்கின்றது...!!!

**************

விரும்பும் போது விரும்புகிறேன்
என்பதை விட வெறுக்கும் போது
விரும்பினேன் என்பதே
உண்மையான அன்பு...!!!

***************

நாம் வாழ்கின்ற இந்த வாழ்கையில்
காதலும் நட்பும் இரு கவிதைகள்
அன்பான காதலை நேசிப்போம்
அழகான நட்பை சுவாசிப்போம்...!!!

***************

எத்தனை முறை காயப்பட்டாலும்
மனதிற்கு பிடித்தவரை ஒரு போதும்
வெறுக்காது “இதயம்” வெறுப்பது
போல நடிக்க மட்டுமே முடியும்...!!!

***************

அவள் ஊரில் இல்லை என்பதை
சொல்லாமல் சொல்கிறது அவள்
வீட்டு செடியில் உள்ள வாடிய ரோஜா...!!!

***************

மண்ணை பார்த்து நடக்கும் “அவள்”
அழகைக் கண்டு பூமியும்கூட அவளை
காதலித்துவிடுமோ என்று அஞ்சினேன்
நல்லவேளை உயிர் பிழைத்தேன்
பூமியும் ஒரு பெண் என்பதால்...!!!

************

அவளை பார்த்த முதல்நாள் நினைவில்
இல்லை...அவளை பார்த்த நாள்முதல்
நினைவே இல்லை...!!!

***************

பிரிந்து போன நினைவுகள் ஒவ்வொரு
நாளும் கண்களுக்குள் வந்துகொண்டுதான்
இருக்கின்றன கனவாக அல்ல கண்ணீராக...!!!

***************

அன்பெனும் உயிர்க் கூட்டில் உன்னை
வைத்து பூஐிப்பது உனக்கு தெரியாது...
அன்பே தினம் தினம் உந்தன் நினைவால்
வாடும் இந்த ஐீவனின் ஏக்கம் தெரியுமா உனக்கு?
இது கதை சொல்லும் கடிதம் அல்ல
என் கண்ணீா் எழுதும் காதல் கவிதை...!!!

**************

நீ எனக்காக சொல்லும் கவிதைகளை விட
உன் மௌனம் சொல்லும் கவிதைகளே
எனக்கு பிடிக்கிறது ஏன் தெரியுமா...???
உன் மௌனத்தின் அா்த்தம் தான்
இன்னும் எனக்கு புரியவில்லை...!!!

**************

உயிரானவளே கவிதையிலேயே உன்னை
இவ்வளவு நேசிக்கிறேனே...ஒரு வேளை
நிஐத்தில் நீ கிடைத்திருந்தால் உன்னை
எப்படியெல்லாம் நேசித்திருப்பேன்...!!!

***************

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும்
தனது இரகசியப் பக்கத்தை தட்டிப் பார்த்தால்
அங்கு காதல் எனும் புதிய அத்தியாயம்
காணப்படும் அது பல காரணத்தால்
ஒதுக்கப்படுகின்றன இது
உலக நியதியாகும்...!!!

***************

உயிரோடு இணைந்து விட்ட நினைவுகளை
உயிரை அழித்தாலே மட்டுமே அழியும்
உன்னை பற்றிய நினைவுகளும் என்
உயிரோடு இணைந்து விட்டவை...!!!

****************

எந்த ஒரு இதயம் உன்னை பார்க்க
கூடாதென்று சொல்லி மறக்க துடிக்கிறதோ
அந்த இதயம் தான் உன்னை அதிகமாக நேசிக்கும்...!!!

**************
சிரித்துப் பேசிய நீ சில நிமிடம் மௌனம்
கொண்டாய் கண்டவுடன் புன்னகைக்கும்
நீ கண்டும் காணாமல் பக்க பார்வைக்கு
உன் பக்கம் அலையும் இவன் மேல்
கோபம் ஏன் தோழி...???

***************

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு
வரவில்லை ஆனால் நான் இறக்கும்
போது கண்டிப்பாக கொண்டு செல்வேன்
பாசமான உங்கள் நட்பின் நினைவுகளை...!!!

**************

காதலிக்க தெரியாத பெண்ணின்
கூந்தலில் இருப்பதை விட காதலிக்க
தெரிந்த ஆணின் கல்லறையில்
இருப்பது மேல்...!!!

**************

முதல் காதலை அடைய முயற்சிக்கும்
போது தகுதி இருப்பதில்லை...எல்லா
தகுதிகளையும் அடைந்துவிட்ட பிறகு
முதல் காதல் கிடைப்பதில்லை...!!!

**************

விரல் பிடித்து என்னுடன் வருவாய்
என்று தான் நினைத்தேன்...
விலகி செல்வாய் என்று தெரிந்திருந்தால்
விட்டிருப்பேன் உன் விரலை அல்ல
என் உயிரை...!!!

*************