Sunday, June 20, 2010

ஏன் தோழி...!!!


சிரித்துப் பேசிய நீ சில நிமிடம்
மௌனம் கொண்டாய் கண்டவுடன்
புன்னகைக்கும் நீ கண்டும் காணாமல்
பக்க பார்வைக்கு உன் பக்கம் அலையும்
இவன் மேல் கோபம் ஏன் தோழி...!!!

உயிரே...!!!


உயிரே உன் பூங்காவனத்துள் எந்தன்
சுவாசத்தை சிறைவைத்து விட்டு இன்று
பாலைவனத்தில் வாசகம் தேடுகின்றாயா
எனது இருப்பிடம் நிரந்தரமற்றதாக
இருந்தாலும் உன் மீது கொண்ட என்
அன்பு நிரந்தரமானது...!!!

இதயத்தில் நீ...!!!


கண்ணுக்குள் விழுந்தவள் நீ
கவிதை எழுத வைத்தவளும் நீ
இதயத்தை துளைத்தவளும் நீ
என் இளமையை ரசித்தவளும் நீ
காதலிக்க வைத்தவளும் நீ...!!!

நினைவானவளே...!!!


வாசிக்கப்படாத
வார்த்தைகளிற்குள்

நான் புதையுண்டு
போனாலும்

என் விதியின்
கீறல்களுடன்
தினமும்
உன்னை
சுவாசித்துக்
கொண்டேயிருப்பேன்...!!!

உண்மைக் காதல்


காதலை கவிதையாக்கி

கண்களாலேநீ காதலைச்

சொன்னதும் உன் விரசமில்லா

வார்தைகளும் விரல்படாத

நெருக்கமும் உன் முகத்தைப்

போலவே உன் உள்ளமும்

என்னைக் காணாத நாட்களில்

நீ வடிக்கும் கவிதை வரிகளும்

உன் உண்மையான

காதலை தெரிவித்தன...!!!இன்றும்

உன்னை ஞாபகப்படுத்துகின்றது...!!!

கடைசியாக...!!!


உன் நினைவுகளை மறக்க முயன்று

தோற்றுப்போய் விழித்துக்கொண்டிருப்பது

என் விழிகள் மட்டுமல்ல மனமும் தான்

உன் நினைவுகளை மறந்து மனதுக்கு

போர்வையிட்டு உறங்கும் ஆழ்ந்த

உறக்கத்தையாவது கற்றுக் கொடுத்துவிட்டு

போயிருக்கலாமே கடைசியாக...!!!

இனியவளே...!!!


முகில்கள் மேகத்தை விட்டு விலகுவதுமில்லை

மேகம் முகிலை விட்டு மறைவதுமில்லை

என்னுள் இருக்கும் உன் நினைவு என்னை

விட்டு பிரிவதுமில்லை என் உயிரினில்

இருக்கும் காதல் இந்த மண்ணை விட்டு

மறைவதுமில்லை...!!!

என்னவளே...!!!


இதயக்கதவைத் திறந்தவளே உன்னால்

மனதை புரிந்திட முடியவில்லை...?

என் பாதையில் வரத்துடித்தவளே

உனக்கு என் வழி தொடங்க முடியவில்லை...?

என்னை நேசித்த உனக்கு என் இலட்சியங்களை

நேசிக்க தெரியவில்லை...? நிழலாக வரமுடிந்த

உனக்கு நிஜமாக ஏன் வர முடியவில்லை...?