உண்மைக் காதல்
காதலை கவிதையாக்கி
கண்களாலேநீ காதலைச்
சொன்னதும் உன் விரசமில்லா
வார்தைகளும் விரல்படாத
நெருக்கமும் உன் முகத்தைப்
போலவே உன் உள்ளமும்
என்னைக் காணாத நாட்களில்
நீ வடிக்கும் கவிதை வரிகளும்
உன் உண்மையான
காதலை தெரிவித்தன...!!!இன்றும்
உன்னை ஞாபகப்படுத்துகின்றது...!!!
No comments:
Post a Comment