Saturday, September 11, 2010
உன் ஞாபகம்...!!!
அன்று நீ
சிரித்துப் பேசிய
நிமிடங்கள்
ஒவ்வொன்றும்...
இன்று முள்ளாய்
குத்துகிறது
பிரிவு வருமென்று
தெரிந்திருந்தால்
அன்றே அழுதிருப்பேன்
மொத்தமாய்...!!!
மறந்து விடுங்கள்...!!!
காதல்
நீங்கள் பேசும் வார்த்தை
எல்லோருக்கும் புரியும்
ஆனால் நீங்கள் பேசாத
மௌனம் உங்களை
நேசிப்பவருக்கு மட்டுமே
புரியும்...!!!
எனக்கு மட்டுமே சொந்தம்
என்று நான் எதையும்
நினைத்ததில்லை...
உங்கள் அன்பை தவிர...!!!
உயிரே இப்பொழுதே
என்னை காதலித்துவிடு
இல்லையென்றால் அடுத்த
ஜென்மத்தில் இதற்கும்
சேர்த்து நிறைய காதலிக்க
வேண்டியிருக்கும்...!!!
உயிரே கண்ணுக்கு
தெரியாமல் இருப்பதால்
தானோ என் இதயத்தின்
வேதனையை உன்னால்
அறிய முடியவில்லையோ...?
அன்பான உன்
பார்வை...
அரவணைப்பான உன்
பேச்சு...
ஆழமான உன்
வார்த்தைகள்...
ஆடம்பரமில்லா உன்
வாழ்க்கை...
அருமையான உன்
கவித்துளிகள்...
அடக்கமான உன்
கோபம்...
அன்பு கொள்ள வைக்கும் உன்
நளினம்...
ஆத்மார்த்தமான உன்
முகம்...
ஆணவம் இல்லாத உன்
பணிவு...
இவையாவும் தான் உன்மீது
என்னைக் காதல் கொள்ளச் செய்கிறது...!!!
Subscribe to:
Posts (Atom)