நொடிக்கு நொடி
நினைக்கும் உன்னை
எப்படி மறப்பதென்று
தெரியாமல்தான்
உறங்கிவிட்டேன்
இந்த கல்லறையில்...!!!
மலர் போன்ற உன்
இதயத்திற்குள்
வாசமாக பிறக்க
ஆசைப்படுகிறேன்
உன்னோடு நானும்
உதிர்ந்து போக...!!!
"நீ என்னை நேசிக்கிறாய்"
என்று சொல்வதை விட
"நீ என்னை பிரியமாட்டாய்"
என்று சொல்வதைத்தான்
நான் அதிகம் விரும்புகிறேன்...!!!