Monday, July 26, 2010

காதல் வலி


தென்றல் மோதி மலருக்கு
வலிப்பதில்லை ஆனால்
உங்கள் நினைவுகள் மோதி
என் இதயம் வலிக்கின்றது
சுமையாக அல்ல சுகமாக...!!!



காதலிப்பதற்கு நீ
இருக்கிறாய் என்ற காரணமே
போதுமாயிருக்கிறது நான்
தொடர்ந்து சுவாசிப்பதற்கு...!!!


என்னை பிடிக்கவில்லை
என்ற வார்த்தைகள் கூட
அழகாகத்தான் இருந்தது
அவள் உதடுகள் உச்சரித்த
போது...!!!



உன்னுடைய கண்ணீர் துளிகள்
ஒவ்வொன்றும் எனக்கு
சொந்தமானவை அதை
வீணாக்க உனக்கு உரிமை
இல்லை...கண்கள்.



எங்கு பார்த்தாலும் காதலர்கள்...
என்னைத்தான் காதலிக்க யாரும்
இல்லையென்று திரும்பினால்
என்னையும் காதலிக்கிறது
என் நிழல்...!!!



காயமின்றி இதயம்
வலிக்கிறது காரணம்
இன்றி அவள் என்னை
வெறுத்ததால்...!!!



துடிக்க மட்டுமே தெரிந்த என்
இதயத்திற்கு தவிக்கவும்
கற்றுக் கொடுத்தது
உன் அன்பு...!!!

யாருக்கும் தெரியாமல்
அவளை
நேசிக்கிறேன்
ஒரு நாள் அவளுக்கே

தெரியாமல் என்னை
நேசிப்பாள் என்று...!!!


ஆயுள் முழுவதும்
அவளுக்காக

காத்திருக்க தயார்

மரணம் போல்

அவள் நிச்சயமாய்

வருவாள் என்றால்...!!!


என்னை விட்டுச்சென்ற அவளை இன்னும்
காதலித்துக்கொண்டுதான் இருக்கிறேன்
அவளை மறக்கமுடியாமல் இல்லை
இன்னொருவளை நினைக்கத்
தெரியாமல்...!!!



உன்னைக் காதலித்துக் கொண்டிருக்கும்போது
நான் இறந்துபோவேனா என்பது தெரியாது
ஆனால் நான் இறக்கும்போதும் உன்னைக்
காதலித்துக்கொண்டிருப்பேன் என்பது
மட்டும் தெரியும்...!!!



அற்புதமான காதலை மட்டுமல்ல
அதை உன்னிடம் சொல்ல முடியாத
அதி அற்புதமான மெளனத்தையும்
நீ தான் எனக்குத் தந்தாய்...!!!



நீ சாய்வதற்கு என்றே
வைத்திருக்கும் என்
தோள்களில் யார் யாரோ
தூங்கி சாய்கிறார்கள்
பயணத்தில்...!!!



காதல் என்பதை யார் வேண்டுமானாலும்
கற்பனை பண்ணமுடியும் ஆனால்
அதன் வலியை காதலித்தவன்
மட்டுமே உணரமுடியும்...!!!

Sunday, July 18, 2010

நினைவு


நொடிக்கு நொடி

நினைக்கும் உன்னை

எப்படி மறப்பதென்று

தெரியாமல்தான்

உறங்கிவிட்டேன்

இந்த கல்லறையில்...!!!



மலர் போன்ற உன்

இதயத்திற்குள்

வாசமாக பிறக்க

ஆசைப்படுகிறேன்

உன்னோடு நானும்

உதிர்ந்து போக...!!!



"நீ என்னை நேசிக்கிறாய்"
என்று சொல்வதை விட
"நீ என்னை பிரியமாட்டாய்"
என்று சொல்வதைத்தான்
நான் அதிகம் விரும்புகிறேன்...!!!

என்னவளை பறித்த உன்னவனை

பற்றி நீ பேசும் போதெல்லாம்

காலடியில் சிக்கிய ரோஜாவாய்

கசங்குகிறது என் காதல்...!!!



நீ என்னருகில் இல்லை

என்பது எவ்வளவு

உண்மையோ அவ்வளவு

உண்மை நீ எனக்குள்

இருக்கிறாய் என்பதும்...!!!



ஒவ்வொரு நொடியும் உன்னை

காணும் நாள் வராதோ என

துடிக்கிறேன் நீ எனக்குள் தான்

இருக்கிறாய் என்பதையும் மறந்து...!!!



விக்கல் வரும்போதெல்லாம் யாரோ

நினைக்கிறார்கள் என்று சொல்வதெல்லாம்

பொய் அது உண்மையாக இருந்தால்

என் காதலி விக்கியே செத்திருப்பாள்...!!!

பிரிவு


எனக்காக பூத்திருக்கும்
ரோஜாவைக் கூட பறிக்க
முடியவில்லை...காரணம்
பிரிவின் வலி எனக்கும் தெரியும்...!!!

Thursday, July 08, 2010

சொல்லாத காதல்...!!!


கால் நனைக்கும் அலைகளோடு
கடற்கரையில் கைகோர்த்து நடந்ததில்லை...

யாரும் இல்லாத தனிமையில்
நடுக்கத்தோடு உதடுகளை ஒட்டியதில்லை...
...
ஆள் இல்லா திரையரங்குகளில்
கார்னர் சீட்டில் கதை பேசியதில்லை...

புற நகர் பூங்கா நாற்காலிகளில்
மடியில் தலை வைத்து படுத்ததில்லை...

கூட்டமான பஸ் பயணங்களில்
குறுஞ்செய்தி அனுப்பி கொஞ்சிக்கொண்டதில்லை...

பேய் உறங்கும் வேளையிலும்,
போர்வைக்குள் போனை ஒளித்து
பேசியதில்லை...

செல்ல சண்டைகள் போட்டு பிரிந்து
அடுத்த நாள் அனைத்தையும் மறந்து
தலை கோதியதில்லை...

பிப்ரவரி 14 க்கும்,
பிரிதொரு நாள் வரும் பிறந்த நாளுக்கும்
பரிசுகள் வாங்க மெனக்கெட்டதில்லை...

உன் நினைவை சொல்லும்
கடிதங்களும் , காதல் பரிசுகளும்
இல்லை என்னிடம்...

நீ போகும் பாதையில் சிந்தி செல்லும்
புன்னகையையும், பூக்களையும்தான்
சேர்த்து வைத்து இருக்கிறேன்...

தெற்று பல் தெரிய சிரிக்கும்
உன் முகம் மட்டும்தான் நெஞ்சில்
இருக்கிறது ஞாபகார்த்தமாய்...

இருந்தாலும் சந்தோசமாகத்தான் இருக்கிறேன்
சுகமாய்த்தான் இருக்கிறது இந்த தனிமையும்...

சொல்லாத காதலும் சொர்க்கம்தான்
நீ எனக்கில்லை என சுடும் அந்த நொடிகளை தவிர...!!!