Saturday, June 19, 2010

உன் நினைவு


சிந்திக்கும் போதெல்லாம் சிந்தனையில்
உன் நினைவு
தப்பிக்க முடியாமல் தவிக்கிறது
என்
மனது தரணியில் உனைக்காண தவம்
என்ன செய்தேனோ தலையணையில்

உன் நினைவு தடம்புரள வைக்கிறது
தாரமாய் நீ வரும்வரை

தவறாது உன் நினைவு...!!!

வாடிய மனம்


அன்பே பூக்களெல்லாம்
உன் பாதச்சுவடாய்
தெரிந்தாலும் உன்
வருகை தெரியாமல்
வாடித்தான் போகிறது
என் இதயம்...!!!

காதல் கவிதைகள்... (01)

உலகத்தில் மலரை நேசிப்பவர்கள்
முள்ளை நேசிப்பது இல்லை
ஆனால்
நான் முள்ளை நேசிக்கிறேன்
ஒரு மலர்
என்னை காயப்படுத்தியதால்...!!!

**************

உங்கள் நட்பினால் உங்களை பிரிந்து
செல்லும் பாதைகளில் கிடந்த முட்கள்
குத்தியதில் பாதங்களில் மட்டுமல்ல
இதயத்திலும் குருதி கொப்பளிக்கின்றது...!!!

**************

சுமக்க முடியாத வேதனை சொல்ல
முடியாத மௌனம் ஆற்ற முடியாத
மனது இவற்றிடையே என்னிதய
இதழ்கள் விம்மி அழுவது எனக்கு
மட்டும் தெரிகின்றது...!!!

**************

பேசாத வார்த்தையை விட பார்க்காத
கண்களை விட நினைத்துக் கொண்டிருக்கும்
இதயத்திற்கு வலி அதிகம்...!!!

நீ எது வாங்கிக் கொடுத்தாலும் எதையாவது
செய்து விடுவேன் பதிலுக்கு இன்று பிரிவை
தந்திருக்கிறாய் பதிலுக்கு என்ன செய்வேன்...???

***************

அழகை பார்த்தே முதல் காதல்
வருகிறது அழகிடம் தோற்றுப்போயே
உண்மைக் காதல்
வருகிறது...!!!

****************

அன்று உன்னை காதலிக்கும் போது
காதலுக்கு பயப்பிட்டேன் இன்று யாரையும்
காதலிக்க பயப்பிடுகிறேன் உன்னை
மாதிரியே இருந்து விடுவாளோ என்று...!!!

*****************

யாரோடு வாழ முடியுமோ அவரோடு
வாழ்வதல்ல வாழ்க்கை யாரின்றி வாழ
முடியாதோ அவரோடு வாழ்வது தான் வாழ்க்கை...!!!

*****************

உலகம் என்பதில் நீ சின்ன ஜீவன் ஆனால்
உன்னை நேசிக்கும் ஒரு ஜீவனுக்கு நீ தான்
உலகம்...!!!

****************

முதல் காதலை அடைய நினைக்கும் போது
தகுதிகள் இருப்பதில்லை எல்லா தகுதிகளும்
கிடைக்கும் போது முதல் காதல் இருப்பதில்லை...!!!

**************

ஒரு உயிரை நீ நேசிப்பது நிஜம் என்றால்
அதை பறவை போல் பறக்கவிடு அது
உன்னை நேசிப்பது நிஜம் என்றால்
மீண்டும் உன்னை தேடிவரும்...!!!

***************

உறவின் மீது அன்பு வைப்பதை விட
உள்ளத்தின் மீது அன்பு வைத்துப் பாருங்கள்
அன்பு வைத்த உள்ளத்தின் கோபம் கூட
நமக்கு சுகமாகத்தான் தெரியும்...!!!

****************

நீ நேசிப்போர்க்கு உன் இதயத்தில் இடம்
கொடு உன்னை மட்டுமே நினைக்கும்
இதயத்திற்கு உன் உயிரையும் சேர்த்துக்கொடு...!!!

****************

அன்பு தான் இந்த உலகத்தில் எல்லா
நோய்களுக்கும் மருந்து அந்த அன்பு
பொய்யானால் உலகத்தில் அதைவிட
கொடிய விசம் எதுவுமில்லை...!!!

****************

அவள் மீது நான் கோபப்படும் போது என்னை
நான் வெறுக்கிறேன் என் மீது அவள்
கோபப்படும் போது அவளை
நான் ரசிக்கிறேன்...!!!

****************

அன்பின் ஆழம் எவ்வளவு என்பது
பிரிவின் போது தான் உணரமுடியும்
அதை உணா்கிறேன் உன்னை காணாமல்
இருக்கும் இந்த நிமிடங்களில்...!!!

*****************

காதல் ஒரு கனவு தான் சில பேருக்கு பலிக்கும்
பல பேருக்கு வலிக்கும் ஆனால் நட்பு மட்டும்
எப்போதும் ஜொலிக்கும்...!!!

******************

இனிமேல் எனக்கு இலையுதிர் காலம்
இல்லைதான் ஏனெனில் பட்ட மரத்திற்கு
ஏதடி இலையுதிர் காலமெல்லாம்...!!!

******************

அன்பான ஒருவரிடம் தோற்றுப்பாருங்கள்
வெற்றியை விட தோல்வி எத்தனை சுகம்
என்று தெரியும்...!!!

******************

கவிதை எழுத தெரியாத என்னை உலகமே
கவிஞன் என்றது தெரியாமல் எழுதிவிட்டேன்
உன் பெயரை...!!!

******************

என் கண்ணீா் துளிகூட என் கன்னங்களில்
கவிதை எழுதுகிறது என் உணா்வுகள் கூட
அதை தினம்தோறும் வாசிக்கின்றது என்
இதயம் கூட உன் காதலை தேடி தவிக்கின்றது...!!!

**************

விரும்பும் போது விரும்புகிறேன்
என்பதை விட வெறுக்கும் போது
விரும்பினேன் என்பதே
உண்மையான அன்பு...!!!

***************

நாம் வாழ்கின்ற இந்த வாழ்கையில்
காதலும் நட்பும் இரு கவிதைகள்
அன்பான காதலை நேசிப்போம்
அழகான நட்பை சுவாசிப்போம்...!!!

***************

எத்தனை முறை காயப்பட்டாலும்
மனதிற்கு பிடித்தவரை ஒரு போதும்
வெறுக்காது “இதயம்” வெறுப்பது
போல நடிக்க மட்டுமே முடியும்...!!!

***************

அவள் ஊரில் இல்லை என்பதை
சொல்லாமல் சொல்கிறது அவள்
வீட்டு செடியில் உள்ள வாடிய ரோஜா...!!!

***************

மண்ணை பார்த்து நடக்கும் “அவள்”
அழகைக் கண்டு பூமியும்கூட அவளை
காதலித்துவிடுமோ என்று அஞ்சினேன்
நல்லவேளை உயிர் பிழைத்தேன்
பூமியும் ஒரு பெண் என்பதால்...!!!

************

அவளை பார்த்த முதல்நாள் நினைவில்
இல்லை...அவளை பார்த்த நாள்முதல்
நினைவே இல்லை...!!!

***************

பிரிந்து போன நினைவுகள் ஒவ்வொரு
நாளும் கண்களுக்குள் வந்துகொண்டுதான்
இருக்கின்றன கனவாக அல்ல கண்ணீராக...!!!

***************

அன்பெனும் உயிர்க் கூட்டில் உன்னை
வைத்து பூஐிப்பது உனக்கு தெரியாது...
அன்பே தினம் தினம் உந்தன் நினைவால்
வாடும் இந்த ஐீவனின் ஏக்கம் தெரியுமா உனக்கு?
இது கதை சொல்லும் கடிதம் அல்ல
என் கண்ணீா் எழுதும் காதல் கவிதை...!!!

**************

நீ எனக்காக சொல்லும் கவிதைகளை விட
உன் மௌனம் சொல்லும் கவிதைகளே
எனக்கு பிடிக்கிறது ஏன் தெரியுமா...???
உன் மௌனத்தின் அா்த்தம் தான்
இன்னும் எனக்கு புரியவில்லை...!!!

**************

உயிரானவளே கவிதையிலேயே உன்னை
இவ்வளவு நேசிக்கிறேனே...ஒரு வேளை
நிஐத்தில் நீ கிடைத்திருந்தால் உன்னை
எப்படியெல்லாம் நேசித்திருப்பேன்...!!!

***************

உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும்
தனது இரகசியப் பக்கத்தை தட்டிப் பார்த்தால்
அங்கு காதல் எனும் புதிய அத்தியாயம்
காணப்படும் அது பல காரணத்தால்
ஒதுக்கப்படுகின்றன இது
உலக நியதியாகும்...!!!

***************

உயிரோடு இணைந்து விட்ட நினைவுகளை
உயிரை அழித்தாலே மட்டுமே அழியும்
உன்னை பற்றிய நினைவுகளும் என்
உயிரோடு இணைந்து விட்டவை...!!!

****************

எந்த ஒரு இதயம் உன்னை பார்க்க
கூடாதென்று சொல்லி மறக்க துடிக்கிறதோ
அந்த இதயம் தான் உன்னை அதிகமாக நேசிக்கும்...!!!

**************
சிரித்துப் பேசிய நீ சில நிமிடம் மௌனம்
கொண்டாய் கண்டவுடன் புன்னகைக்கும்
நீ கண்டும் காணாமல் பக்க பார்வைக்கு
உன் பக்கம் அலையும் இவன் மேல்
கோபம் ஏன் தோழி...???

***************

பிறக்கும் போது நான் எதையும் கொண்டு
வரவில்லை ஆனால் நான் இறக்கும்
போது கண்டிப்பாக கொண்டு செல்வேன்
பாசமான உங்கள் நட்பின் நினைவுகளை...!!!

**************

காதலிக்க தெரியாத பெண்ணின்
கூந்தலில் இருப்பதை விட காதலிக்க
தெரிந்த ஆணின் கல்லறையில்
இருப்பது மேல்...!!!

**************

முதல் காதலை அடைய முயற்சிக்கும்
போது தகுதி இருப்பதில்லை...எல்லா
தகுதிகளையும் அடைந்துவிட்ட பிறகு
முதல் காதல் கிடைப்பதில்லை...!!!

**************

விரல் பிடித்து என்னுடன் வருவாய்
என்று தான் நினைத்தேன்...
விலகி செல்வாய் என்று தெரிந்திருந்தால்
விட்டிருப்பேன் உன் விரலை அல்ல
என் உயிரை...!!!

*************